பேக்கரி உரிமையாளர் தற்கொலை


பேக்கரி உரிமையாளர் தற்கொலை
x

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பேக்கரி உரிமையாளர் தற்கொலை

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பெரியகடை தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 78). இவர் குமரி மாவட்டம் வடசேரியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இதற்காக அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கி இருந்தார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடையை சரியாக நடத்த முடியாமல் மனமுடைந்தது காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வெங்கட்ராமன் லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story