மொபட் மோதிய விபத்தில் பேக்கரி ஊழியர் சாவு

மொபட் மோதிய விபத்தில் பேக்கரி ஊழியர் சாவு
பொள்ளாச்சி
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள ஆலாந்தூரை சேர்ந்தவர் பாபு (வயது 40). இவர் சமத்தூர் மணல் மேடு பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் அதே பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த மொபட் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் மொபட்டை ஓட்டி வந்து, விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





