பக்ரீத் பண்டிகை: சென்னையில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கம்


பக்ரீத் பண்டிகை: சென்னையில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x

பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை,

பக்ரீத் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (28-ந்தேதி) இரவு 11.15 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரெயில் (எண்:06052) சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.10 மணிக்கும், தாம்பரத்துக்கு நள்ளிரவு 12.43 மணிக்கும் திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 11.45 மணிக்கும் சென்றடையும்.

மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து 29-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரெயில் (எண்:06051) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.

கோவை-திருப்பதி அதிவிரைவு ரெயில் (எண்:22616/22615) 29-ந்தேதியும் விழுப்புரம்- திருப்பதி விரைவு ரெயில் (எண்:16854/ 16853) நேற்று முதல் ஜூலை 2-ந்தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும். அதே தேதிகளில் இந்த ரெயில்கள் காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை, விழுப்புரத்துக்கு இயக்கப்படும். தாம்பரம், சாந்த்ராகாச்சி அந்தியோதயா விரைவு ரெயில் (எண்:22842), பெங்களூரு- ஹவுரா குளிர்சாதன அதிவிரைவு ரெயில் (எண்:22864) இன்று (புதன் கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story