பாலாபிஷேகம்


பாலாபிஷேகம்
x

புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் பாலாபிஷேகம்

தென்காசி

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானியம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் பால் அபிஷேகம், திருவிளக்கு பூஜை நடந்தது.

இதையெர்டி ஆனி மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோவில் குருநாதர் சக்தியம்மா சொற்பொழிவாற்றினார். முப்பெரும் தேவி அம்மனுக்கு பன்னீர், மஞ்சள், இளநீர் உள்பட 21 வகையான அபிஷேகம், பிரார்த்தனை, 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடந்தது. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு இரவு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story