வாழைத்தார் விலை உயர்வு


வாழைத்தார் விலை உயர்வு
x

வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் பூவன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். விவசாயிகள் வாழைத்தார் நன்கு விளைந்ததும் பறித்து, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி வாழைத்தார்ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.450-க்கும், ரஸ்தாலி ரூ.350-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கும், மொந்தன் ரூ.500-க்கும் விற்பனையானது.

தற்போது, பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.400-க்கும், ரஸ்தாலி ரூ.400-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும், மொந்தன் ரூ.700-க்கும் விற்பனையானது.


Next Story