நொய்யல் பகுதியில் வாழைத்தார் விலை உயர்வு


நொய்யல் பகுதியில் வாழைத்தார் விலை உயர்வு
x

நொய்யல் பகுதியில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழைகளை பயிரிட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்களை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். மேலும் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றும் விவசாயிகள் விற்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாளி ரூ.400-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.550-க்கும், மொந்தன் ரூ.500-க்கும் விற்பனையானது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story