வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு


வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
x

வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன் உள்ளிட்ட பல்வேறு வாழைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். வாழைத்தார்கள் விளைந்ததும் வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி விற்பனை மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கு விற்றது தற்போது ரூ.350-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கு விற்றது தற்போது ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-க்கு விற்றது தற்போது ரூ.400-க்கும், ரஸ்தாலி ரூ.250-க்கு விற்றது தற்போது ரூ.350-க்கும், மொந்தன் ரூ.300-க்கு விற்றது ரூ.400-க்கும் விற்பனையானது. வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story