வாழைகள் மழைநீரில் மூழ்கின


வாழைகள் மழைநீரில் மூழ்கின
x

வாழைகள் மழைநீரில் மூழ்கின.

திருச்சி

சோமரசம்பேட்டை அருகே வயலூரில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக சுமார் 60 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் வாழைக்கன்றுகள் ஊன்றி 4 மாதங்கள் ஆகின்றன. மழையால் தண்ணீர் சூழ்ந்து வாழைக்கன்றுகள் மூழ்கியதால் இனி வாழைத்தார் போட்டாலும் பழைய மகசூல் கிடைக்காது. இந்த மழை நீரினால் பயிரின் வேர் அழுகி நுண்ணூட்ட சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வாழைக்கன்றுகளை ஆய்வு செய்து எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்யவேண்டும், என்றனர். இதேபோல் குழுமணி அருகே உள்ள ஏகிரிமங்கலம் கிராமத்திலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


Next Story