மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் திறப்புரூ.1 கோடி காணிக்கை வசூல்


மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் திறப்புரூ.1 கோடி காணிக்கை வசூல்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

விழுப்புரம்

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து காணிக்கை பணம் எண்ணப்படும். அதன்படி நேற்று அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் ஜீவானந்தம், கள்ளக்குறிச்சி சிவாகரன், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர் சங்கீதா, அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் பூசாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 7 லட்சத்து 37 ஆயிரத்து 553 ரொக்கமும், 324 கிராம் தங்க நகைகளும், 2045 கிராம் வெள்ளிப் பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் எண்ணும் பணியின்போது அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story