விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு


விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள 10 உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 9 லட்சத்து 18 ஆயிரத்து 53 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 6 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. காணிக்கை எண்ணும் பணியின்போது கோவில் செயல் அலுவலர் மாலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

1 More update

Next Story