மதுக்கடைகள் 2 நாட்கள் மூடல்


மதுக்கடைகள் 2 நாட்கள் மூடல்
x
தினத்தந்தி 26 Sep 2023 9:45 PM GMT (Updated: 26 Sep 2023 9:46 PM GMT)

நீலகிரியில் மிலாது நபி, காந்தி ஜெயந்தியையொட்டி மதுக்கடைகள் 2 நாட்கள் மூடப்படுகிறது.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- நீலகிரி மாவட்டத்தில் மிலாது நபி தினமான நாளையும், காந்தி ஜெயந்தி தினமான வருகிற அக்டோபர் 2-ந் தேதியும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகள், கிளப்புகள், ஹோட்டல் பார்கள் உட்பட தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்திற்கும் விடுமுறை அளித்து மூடப்பட வேண்டும்.

இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் ஏதும் திறந்து இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story