பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி


பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி
x

பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நாளை தொடங்குகிறது.

பெரம்பலூர்

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் திருச்சி மண்டல அளவிலான 16-வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இருந்து 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் ஏறத்தாழ 400 பேர் கலந்துகொள்ள இருப்பதாக தமிழ்நாடு கூடைப்பந்து கழக மாநில தலைவரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூன், மாநில செயலாளர் அஜிஸ் மற்றும் போட்டிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் ஹரீஸ்ரவிச்சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story