நல்லம்பள்ளி அருகேபட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


நல்லம்பள்ளி அருகேபட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தர்மபுரி

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே பச்சைவீட்டு கொட்டாயில் பட்டாளம்மன், முத்தலாம்மன், கரிவேட்டராயசாமி கோவில் கும்பிஷேக விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி, லட்சுமி, சரஸ்வதி மற்றும் யாகசாலை பூஜை, வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தீர்த்தகுடம் ஊர்வலம், மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பட்டாளம்மன், முத்தலாம்மன், கரிவேட்டராயசாமிகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story