குடியிருப்பில் கரடி நடமாட்டம்


குடியிருப்பில் கரடி நடமாட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2023 8:45 PM GMT (Updated: 26 Jun 2023 8:45 PM GMT)

குடியிருப்பில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

நீலகிரி


கோத்தகிரி


கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையத்திற்கு பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனுவுக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி வனப்பகுதியையொட்டி உள்ளதால், இங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு கரடி அந்த சாலை வழியாக நடந்து சென்றது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே, வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story