"கீழடி 8ம் கட்ட அகழாய்வு" முன்னோர்கள் பயன்படுத்திய அழகிய பொருள் கண்டெடுப்பு


கீழடி 8ம் கட்ட அகழாய்வு முன்னோர்கள் பயன்படுத்திய அழகிய பொருள் கண்டெடுப்பு
x

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணியின் போது, முன்னோர்கள் பயன்படுத்திய பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை அங்கு 7 கட்ட அகழாய்வுகள் நடந்து முடிந்துள்ளன. இதில் பானைகள், முதுமக்கள் தாழிகள், ஆபரண பொருட்கள் உள்பட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இதற்காக 5 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 8 ஆம் கட்ட அகழாய்வு பணியின் போது, பழங்காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய அழகிய கிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த கிண்ணம், கருப்பு, சிவப்பு வண்ணம் கலந்து கானப்பட்டது.



Next Story