சிறப்பாக பணிபுரிந்தவர்கள்-நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்


சிறப்பாக பணிபுரிந்தவர்கள்-நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

சிறப்பாக பணிபுரிந்தவர்கள்-நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, தமிழக முதல்-அமைச்சரால் ஊக்குவித்து கவுரவிக்கப்படுகின்றனர். இதையொட்டி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்களுக்கு மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, விருதுகள் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதியன்று சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளன. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டர், சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், சிறந்த சமூகப்பணியாளர், மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் இருந்து பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை-5 என்ற முகவரிக்கு அனைத்து சான்றிதழ்களுடன் வருகிற 10-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். மேலும், விண்ணப்ப படிவங்களை https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம். மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.

இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story