கோர்ட்டு அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும்


கோர்ட்டு அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும்
x

விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் கோர்ட்டு அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும் என அண்ணாமலை கூறினார்.

விருதுநகர்

விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் கோர்ட்டு அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும் என அண்ணாமலை கூறினார்.

தலைவர்களுக்கு மரியாதை

விருதுநகரில் நேற்று காலை பா.ஜனதா. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். பாண்டியன் நகரில் இருந்து தொண்டர்களுடன் நடைபயணத்தை தொடங்கிய அவரை மகளிர் அணியினர் மலர் தூவி வரவேற்றனர்.

பா.ஜனதா நிர்வாகி ஒருவரின் கடைக்கு சென்று டீ குடித்தார். தட்டச்சு பயிற்சி நிறுவனத்திற்கு சென்று, அங்கு பயிற்சி பெறுபவர்களுடன் கலந்துரையாடினார்.

முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராமமூர்த்தி ரோடு, ெரயில்வே பீடர் ரோடு வழியாக வந்த அவர், காந்திபுரம் தெருவில் இம்மானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பழைய பஸ் நிலையம், வெயிலுகந்த அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்கள், மெயின் பஜார் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பேட்டி

பின்னர் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த நடைபயணத்திற்கு 'நம் மண் நம் மக்கள்' என்று பெயர் வைக்கலாம் என மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு தொண்டனும், ஒவ்வொரு நிர்வாகியும் 'என் மண், என் மக்கள்' என்ற உணர்வோடு செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் நடைபயணத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டது. விருதுநகர் தொகுதியோடு சேர்த்து இதுவரை 22 சட்டமன்ற தொகுதிகளில் நடை பயணம் நிறைவடைந்துள்ளது.

இதுவரை 5500 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 600 மனுக்கள் மத்திய அரசு சார்ந்தவை. அவற்றை நாங்கள் மத்திய அரசிடம் தர உள்ளோம். இதற்கென பா.ஜனதாவில் தனிப்பிரிவு ஏற்படுத்தி மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்.

பிரதமர் நேரடி கண்காணிப்பு

கடந்த 2018-ம் ஆண்டு தேசிய அளவில் அடையாளம் காணப்பட்ட 112 பின்தங்கிய மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டமும் இடம்பெற்றது. ஆனால் நிதி ஆயோக் அமைப்பின் ஆய்வின்படி இந்த மாவட்டம் நிதி சார்ந்த நடவடிக்கைகளில் முதல் இடம் பெற்றது. இம்மாவட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியினை கொண்டு திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கென மத்திய அரசு, கண்காணிப்பு அதிகாரியை நியமித்துள்ளது. பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் விருதுநகர் மாவட்டம் இருந்து வருகிறது. இந்த மாவட்டம் விரைவில் முன்னேறிய மாவட்டமாக உருவாகும்.

விருதுநகர்-சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் 2 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை பணிகள் மேற்கொள்ளவில்லை. இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். காமராஜர் பெயரில் அமைக்கப்பட்ட விருதுநகர் புதிய பஸ் நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத நிலையில் தற்போது அந்தபஸ் நிலையத்தின் நிலைமை பரிதாபமாக உள்ளது. இந்த பஸ் நிலையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசு தேர்தல் வாக்குறுகோர்ட்டு அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும்திப்படி வேலை வாய்ப்பு அளிக்கவில்லை. தேசிய அளவில் தமிழகம்தான் கடன் பெற்றுள்ளதில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு மேல் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி வேண்டும்.

ஜவுளிபூங்கா

மத்திய அரசு விருதுநகரில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தது. இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 22 ஆயிரம் பேருக்கு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். மாவட்ட அமைச்சர்கள் இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாரத மாதா சிலை

கோர்ட்டு மூலம் உரிய அனுமதி பெற்று, விருதுநகர் மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் பாரத மாதா சிலை வைக்கப்படும். மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி அகல ெரயில் பாதை திட்டம் கைவிடப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story