பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு - கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை


பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு - கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை
x

அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து, கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிம் மொத்த உயரம் 105 அடியாகும். அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 28-ம் தேதி, 100 அடியை எட்டியது. இந்நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், அணைக்கான நீர் வரத்து அதிகரித்து, நேற்று காலை அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது.

அணை பாதுகாப்பு விதிமுறைகளின்படி, பவானிசாகர் அணையில் இருந்து நேற்று காலை முதல் உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று (வெள்ளி) காலை விநாடிக்கு 7000 கன அடி என்ற அளவில் உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணைக்கு 25,768 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து, 25,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில், வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


Next Story