மருதனப்பள்ளி ஊராட்சியில் ரூ.1.10 கோடியில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை


மருதனப்பள்ளி ஊராட்சியில்  ரூ.1.10 கோடியில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை
x

மருதனப்பள்ளி ஊராட்சியில் ரூ.1.10 கோடியில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி ஒன்றியம் மருதனப்பள்ளி ஊராட்சியில் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுபிரியா, விமல்ரவிகுமார் ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட கவுன்சிலர் மம்தா மஞ்சுநாத், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், மருதனப்பள்ளி ஊராட்சி தலைவர் ரகு, துணைத்தலைவர் சீனிவாசன் நிர்வாகிகள் புவுல்ராஜ், கேசவரெட்டி, ஒப்பந்ததாரர் பாபு, ஊராட்சி செயலாளர் நாகேந்திரன், வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story