ரூ.42 லட்சத்தில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட பூமிபூஜை


ரூ.42 லட்சத்தில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட பூமிபூஜை
x

ரூ.42 லட்சத்தில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட பூமிபூஜை

தஞ்சாவூர்

பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே வாட்டத்திக்கோட்டை ஊராட்சி உள்ளது. இங்குள்ள வா. கொல்லைக்காடு ஊராட்சி மன்ற வளாக பகுதியில் புதிதாக ரூ. 42 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி பன்னீர்செல்வம், மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. பேச்சாளர் அப்துல் மஜீத், பேராவூரணி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, பொறியாளர் சிவகுமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Next Story