ரூ.14 லட்சத்தில் நிழற்கூடம் கட்ட பூமிபூஜை


ரூ.14 லட்சத்தில் நிழற்கூடம் கட்ட பூமிபூஜை
x

தேன்கனிக்கோட்டை காசி விஸ்வநாதர் கோவிலில்ரூ.14 லட்சத்தில் நிழற்கூடம் கட்ட செல்லகுமார் எம்.பி. பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் பக்தர்கள் நிழற்கூடம் அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் 13-வது வார்டு கவுன்சிலர் சஞ்சனா பாலாஜி, மாநில செயலாளர் தேன்கு அன்வர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், இளைஞரணி மேற்கு மாவட்ட தலைவர் அப்தூர் ரஹ்மான், மகளிர் அணி தலைவி ரரோஜம்மா, சபியுல்லா, தாஸ், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செல்லகுமார் எம்.பி. தேன்கனிக்கோட்டை அரசு கிளை நூலத்தை பார்வையிட்டார். அப்போது மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி புத்தகங்கள் வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கூறி கட்டிடத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story