காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.25 லட்சத்தில் நூலகம் கட்ட பூமி பூஜை


காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.25 லட்சத்தில் நூலகம் கட்ட பூமி பூஜை
x
தினத்தந்தி 27 Jun 2023 7:30 PM GMT (Updated: 28 Jun 2023 7:54 AM GMT)
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் பேரூராட்சியில் ராஜ்யசபா எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் குளிர்சாதன வசதியுடன் நூலகம் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் மனோகரன், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், மாவட்ட கவுன்சிலர் காவேரி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து நூலகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ஆயிஷா, நகர செயலாளர் காந்தி, அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சிவம், கவுன்சிலர் காவேரிஅம்மாள்மாணிக்கம், இந்திராணிராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story