மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிறுமி உள்பட 3 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிறுமி உள்பட 3 பேர் படுகாயம்
x

போடியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி

போடி அருகே பத்ரகாளிபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திசெல்வம் (வயது 31). இவர் நேற்று தனது மகள் கிருத்திகாஸ்ரீயை (6) அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் போடி டி.வி.கே.கே.நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போடி சவுந்தரவேல் நகரை சேர்ந்த வேட்டைகாரன் (56) என்பவர், கார்த்திசெல்வத்தின் அக்காள் முனியம்மாளை (60) அழைத்துக்கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில், மோட்டார் சைக்கிள்களில் வந்த கார்த்திசெல்வம், அவரது மகள் கிருத்திகாஸ்ரீ, முனியம்மாள் ஆகிய 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். வேட்டைகாரன் காயமின்றி தப்பினார். இதையடுத்து காயமடைந்த சிறுமி உள்பட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story