வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் படுகாயம்


வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் படுகாயம்
x

வடமதுரை அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னாண்டவர் (வயது 28). தனியார் நிதி நிறுவன ஊழியர். நேற்று இவர், மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வடமதுரை ரெயில் நிலைய சாலையில் உள்ள விநாயகர் கோவில் அருகே அவர் வந்தபோது, எதிரே சாணார்பட்டி அருகே உள்ள கோனப்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதின.

இதில், பொன்னாண்டவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். வினோத்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து காயமடைந்த பொன்னாண்டவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொன்னாண்டவர் கொடுத்த புகாரின்பேரில் வினோத்குமார் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் பெரியகோட்டை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (30). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வன்னியபாறைப்பட்டி குளம் அருகே அவர் வந்தபோது, எதிரே வன்னியபாறைப்பட்டியை சேர்ந்த சின்னமணி (38) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட பாலமுருகன் படுகாயமடைந்தார். சின்னமணி காயமின்றி உயிர்தப்பினார். இதையடுத்து பாலமுருகன் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சின்னமணி மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story