திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி; 3 பேர் படுகாயம்


திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 Jan 2023 8:30 PM GMT (Updated: 2 Jan 2023 8:30 PM GMT)

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடி சாலையூரை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 55). நேற்று முன்தினம் இவர், தாமரைப்பாடியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அதன்பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக தாமரைப்பாடி பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அவருடன் கோவில்யாகப்பன்பட்டியை சேர்ந்த பங்கிராஜா (60), தனது மகள் பிரியா (38), பேத்தி மெல்வினா (5) ஆகியோருடன் காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காளியம்மாள் மற்றும் பங்கிராஜா, அவரது மகள், பேத்தி ஆகியோர் மீது மோதியது. பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர், அங்கிருந்து வாகனத்துடன் தப்பிவிட்டார். இதற்கிடையே மோட்டார் சைக்கிள் மோதியதில் காளியம்மாள் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காளியம்மாள் உயிரிழந்தார். பங்கிராஜா, பிரியா, மெல்வினா ஆகிய 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காளியம்மாளின் மகன் கருப்பையா கொடுத்த புகாரின்பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story