மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 27 Jan 2023 8:30 PM GMT (Updated: 27 Jan 2023 8:30 PM GMT)

திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள கொம்பேறிபட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 31). இவர் தனியார் உணவு பார்சல் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் பார்சல் வினியோக ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராமகிருஷ்ணன், தோமையார்புரம் பகுதியில் உணவு பார்சல் வினியோகம் செய்துவிட்டு திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். திண்டுக்கல்லில், வத்தலக்குண்டு சாலையில் அவர் வந்தபோது, பின்னால் தூத்துக்குடி சிதம்பரநகரை சேர்ந்த சரவணன் (28) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ராமகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story