மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி உள்பட 2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 28 May 2023 2:30 AM IST (Updated: 28 May 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள கோவில்புரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25). விவசாயி. நேற்று முன்தினம் இவர், கோவில்புரத்தில் இருந்து குள்ளபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஜெயமங்கலத்தில், குள்ளபுரம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் அவர் வந்தபோது, எதிரே குள்ளபுரத்தை சேர்ந்த சுரேஷ்பாண்டி (30) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், விஜயகுமாரும், சுரேஷ்பாண்டியும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story