போக்குவரத்துக்கு இடையூறு: விளம்பர பலகை அகற்றம்


போக்குவரத்துக்கு இடையூறு: விளம்பர பலகை அகற்றம்
x

போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக வர்த்தக நிறுவனங்கள் சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து கமிஷனர் சங்கரன் திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை அகற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சுகாதார பிரிவு அதிகாரி முத்துராஜ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் 53 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை நேற்று அகற்றினர்.

தொடர்ந்து இதே விதிமீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.


Next Story