70 பேருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்


70 பேருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்
x

70 பேருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை


காட்பாடி தாலுகாவில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு 80 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான விசாரணை காட்பாடி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.

உதவி கலெக்டர் கவிதா கலந்து கொண்டு விசாரணை நடத்தினார். அதன் பின்னர் 70 பேருக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வழங்கினார். மீதமுள்ள 10 பேருக்கு மீண்டும் மறுவிசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

அப்போது தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story