கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில்  ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பர்கூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லப்பாடியில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் ராகுல்காந்தி நலமுடன் வாழ வேண்டியும், சோனியாகாந்தி உடல் நலம் குணமடைய வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அம்மனுக்கு பன்னீர், குங்கும அபிஷேகம் நடந்தன. தொடர்ந்து தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், அக.கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, வக்கீல் அசோகன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயசீலன், வட்டார தலைவர்கள் ஜாக்கப், நஞ்சுண்டன், நகர தலைவர் யுவராஜ், இளைஞர் காங்கிரஸ் நகர செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போச்சம்பள்ளி

போச்சம்பள்ளியில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதற்கு வட்டார தலைவர் மின்டிரி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் காசிலிங்கம், மாவட்ட பொது செயலாளர் மடத்தானூர் ஆறுமுகம், ராகுல் பேரவை சிவலிங்கம், மாவட்ட செயலாளர் நாகராஜ், போச்சம்பள்ளி முனிராஜ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மாதேப்பட்டி முருகன் கோவிலில் ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜை நடந்தன. இதற்கு கிருஷ்ணகிரி மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சக்திவேலன், மாதேப்பட்டி அர்ச்சுணன், வட்டார தலைவர் மதியழகன், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல சூரன்குட்டை ஸ்வர்ணாகர்ஷன பைரவர் கோவில், கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரை காலபைரவர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா லண்டன்பேட்டையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட துணைத்தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் டாக்டர் தகி, நகர தலைவர் லலித் ஆண்டனி, மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, ராகுல் பேரவை தலைவர் குட்டி என்கிற விஜயராஜ், ஷானவாஸ், அஜிசுல்லா, இளைஞர் காங்கிரஸ் சதாம், கவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார். முடிவில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஜித்பாஷா நன்றி கூறினார்.

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தி பிறந்தநாள் விழா, ஓசூரில் கொண்டாடப்பட்டது. முன்னதாக மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் தலைமையில், ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பின்னர், மாவட்ட அலுவலகத்தில், முரளிதரன் கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கினார்.

மேலும், ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்களை அவர் வழங்கினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாவட்ட அமைப்புசாரா பிரிவு தலைவர் ஓ.பி.சீனிவாசன், முத்தப்பா, பிரபாகர் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.


Next Story