வாஜ்பாய் பிறந்த நாள் விழா
குந்தாரப்பள்ளியில் பா.ஜனதா சார்பில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி
குருபரப்பள்ளி,
வேப்பனப்பள்ளி ஒன்றியம் குந்தாரப்பள்ளியில் மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வி.எம்.அன்பரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தலைவர் ரமேஷ்பாபு, ஒன்றிய பொதுச் செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள் சந்திரன், முருகன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story