அயனாவரம் மார்க்கெட்டில் பிரியாணி கடைக்காரர் வெட்டிக்கொலை


அயனாவரம் மார்க்கெட்டில் பிரியாணி கடைக்காரர் வெட்டிக்கொலை
x

அயனாவரம் மார்க்கெட்டில் பிரியாணி கடைக்காரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை அமைந்தகரை, கலெக்டர் காலனியை சேர்ந்தவர் நாகூர் கனி (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி கதீஜா என்ற மனைவியும், 5 மற்றும் 3 வயதில் 2 குழந்தைகளும் உள்ளனர்.

நாகூர் கனி, அயனாவரம் மார்க்கெட்டில் கடந்த 2 வருடங்களாக கரீம் என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். நேற்று வழக்கம்போல் நாகூர் கனி கடையில் இருந்தார்.

இரவு 7 மணி அளவில் 3 மோட்டார் சைக்கிளில் அவரது பிரியாணி கடைக்கு வந்த மர்மகும்பல், திடீரென தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் நாகூர் கனியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த நாகூர் கனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அயனாவரம் போலீசார் நாகூர் கனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என விசாரித்து வருகின்றனர்.


Next Story