வால்பாறையில் காட்டெருமை சாவு


வால்பாறையில் காட்டெருமை சாவு
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:46 PM GMT)

வால்பாறையில் காட்டெருமை இறந்து கிடந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் கீழ் பிரிவு தேயிலை தோட்டத்தையொட்டி காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதாக வால்பாறை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் வனவர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று காட்டெருமையின் உடலை பார்வையிட்டனர்.

அப்போது இறந்தது ஆண் காட்டெருமை என்பதும், அதன் உடலில் காயங்களும் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வால்பாறை அரசு கால்நடை டாக்டர் செந்தில்நாதன் காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்தது 10 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை ஆகும். காட்டெருமைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் இந்த காட்டெருமையின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கட்டிய நிலையில் உணவு சாப்பிட முடியாமல் இறந்து போயிருக்கலாம். இதுகுறித்து தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தனர்.


Next Story