பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
x

மதுரை புதூர் பஸ் நிலையத்தில் மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை


மதுரை புதூர் பஸ் நிலையத்தில் மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தான் மந்திரியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் துணைத்தலைவர்கள் ஜெயவேல், குமார், வக்கீல் முத்துக்குமார், இளைஞரணி நிர்வாகி பாரி, ஆசாத், விளையாட்டு பிரிவு அணி சுரேஷ், புதூர் சரவணன் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story