"சமூக விரோதிகளின் கூடாரமாக பாஜக மாறிவருகிறது"- அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்


சமூக விரோதிகளின் கூடாரமாக பாஜக மாறிவருகிறது- அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்
x

சமூக விரோதிகளின் கூடாரமாக பாஜக மாறிவருவதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

இந்த ஆண்டு மட்டும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பட்டியலை பார்த்தால், அதில் பாஜக-வை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர்.

அவதூறுகளை பரப்பி, அதன் மூலமாக நாட்டில் சட்டம், ஒழுங்கை கெடுப்பது, மதவாதத்தை தூண்டுவது, ஒன்றாக இருக்கும் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் சமூக விரோதிகள் முதல் அமைச்சரின் நடவடிக்கையினால், உடனடியாக கைதுசெய்யப்படுகிறார்கள்.

திமுகவில் சிறிய தவறு என்றாலும், கூட அவதூறு பரப்பும் வகையில் பேசினால், உடனடியாக தண்டிக்கப்படுகிறார்கள். பாஜகவை பொறுத்தவரையில், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

தமிழக முதல் அமைச்சரின் உன்னத பணியை மக்கள் நன்கு அறிவார்கள். முதல் அமைச்சர் தலைமையிலான கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story