பா.ஜனதா பிரமுகர் கைது


பா.ஜனதா பிரமுகர் கைது
x

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜனதா பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பால்மாரியப்பன் (வயது 50). இவர் பா.ஜனதா கட்சியின் ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த 17-ந்தேதி விக்கிரமசிங்கபுரத்தில் இந்து முன்னணி மற்றும் பா.ஜனதா சார்பில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பால்மாரியப்பன், தி.மு.க.வினர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் பால் மாரியப்பனை புதுச்சேரியில் கைது செய்து விக்கிரமசிங்கபுரம் அழைத்து வந்தனர்.


Next Story