கைதிகளுக்காக புத்தகங்கள் வழங்கிய பார்வையற்ற மாணவ-மாணவிகள்


கைதிகளுக்காக புத்தகங்கள் வழங்கிய பார்வையற்ற மாணவ-மாணவிகள்
x

கைதிகளுக்காக புத்தகங்கள் பார்வையற்ற மாணவ-மாணவிகள் வழங்கினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் `கூண்டுக்குள் வானம்' எனும் அரங்கு சிறைத்துறையினரால் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிறைகளில் உள்ள கைதிகள் வாசிப்பதற்காக புத்தகங்களை பரிசாக பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் சிறை கைதிகளுக்காக பொதுமக்கள் பலர் புத்தகங்களை வழங்கி வருகின்றனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் பள்ளி சார்பில் பணத்துடன் புத்தக திருவிழாவில் புத்தகங்கள் வாங்கி, அதனை கைதிகளுக்காக பரிசாக சிறைத்துறை அரங்கில் வழங்கினர். இதில் ரூ.4 ஆயிரம் வரையிலான புத்தகங்கள் வழங்கப்பட்டதாக பள்ளி தரப்பில் தெரிவித்தனர்.


Next Story