கண்களை கறுப்பு துணியால் கட்டிக்கொண்டு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்


கண்களை கறுப்பு துணியால் கட்டிக்கொண்டு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்
x

கண்களை கறுப்பு துணியால் கட்டிக்கொண்டு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனா்.

ஈரோடு

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு, தந்தை பெரியார் தொழிற்சங்க பேரவையினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பேரவையின் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

இதில் அரசு போக்குவரத்து கழக ஈரோடு 3-வது கிளை, கொடுமுடி கிளையில் ஓட்டுனர்களின் ஊதியத்தில் பண பலன்களை இழக்க செய்வது, வீண் குற்றச்சாட்டு, குறிப்பாணை வழங்குவது, தவறான உத்தரவுகளை பிறப்பிப்பது போன்றவற்றை கைவிட வலியுறுத்தியும், கிளை நிர்வாகங்களை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது. மேலும் அம்பேத்கர் படத்தை மார்பில் அணிந்தும், கருப்பு நிற துணியால் கண்களை கட்டிக்கொண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் பொதுச்செயலாளர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story