தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ரத்ததானம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ரத்ததானம் செய்தனர்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நடத்திய அமைதி ஊர்வலத்தில் காவல் துறையினர் நடத்திய தடியடியின்போது தாமிரபரணியில் மூழ்கி 17 பேர் இறந்தனர். இதன் 23-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மனித உயிர்களைக் காக்கும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கி, ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானவர்கள் ரத்ததானம் செய்தனர். மாநகர பொருளாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், சீனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





