ரத்த பரிசோதனை முகாம்


ரத்த பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே வாடியூரில் தூய திருமுழுக்கு யோவான் ஆலயம் மற்றும் ரியோ ஸ்கேன் சென்டர் இணைந்து நடத்திய ரத்த பரிசோதனை முகாம் நடந்தது. முகாமுக்கு வாடியூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஸ்தாபக அந்தோணி தலைமை தாங்கினார். கவுன்சிலர் அந்தோணி, தர்மகர்த்தா மைனர் ராஜ், கட்டளைதாரர் மிக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடியூர் பங்குத்தந்தை லியோ வரவேற்றார். முகாமில் வாடியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 128 பேருக்கு ரத்தப்பிரிவு கண்டறியப்பட்டது. முடிவில் ஏசுதாஸ்பிலிப் நன்றி கூறினார்.

1 More update

Next Story