ரத்ததான முகாம்


ரத்ததான முகாம்
x

கரூரில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

கரூர்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கேரள ஜமாஜத்தின் சார்பில் ரத்தத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் விதமாக ரத்ததான முகாம் கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி தலைமை மருத்துவர் அறிவழகன் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஜமா வசந்தகுமார், சுதாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

1 More update

Next Story