ரத்ததான முகாம்


ரத்ததான முகாம்
x

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.

திருவாரூர்

திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இயங்கும் மருத்துவ மையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து ரத்ததான முகாமை நடத்தின. முகாமை பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முகாமில் பல்கலைக்கழகத்தின் தேசிய நலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், டாக்டர்கள் டேவிஸ், விஷ்ணுபிரியா, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சிறப்பாக தொண்டு செய்து 156 யூனிட் ரத்தம் தானம் செய்ததற்காக பாராட்டு சான்றிதழை டாக்டர் பிரியா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் திருமுருகனிடம் வழங்கினார். முகாமில் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு டாக்டர் பிரியா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


Next Story