பொக்லின் எந்திரம், லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்


பொக்லின் எந்திரம், லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
x

சாலை பணிக்காக மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லின் எந்திரம், லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூர் - இருக்கை சாலையில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது .அந்த இடத்தில் மண் குவாரி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இருந்து எடுக்கப்படும் மண் லாரிகள் மூலம் நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை மண் குவாரிக்கு வந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலம், விளைநிலங்கள் அருகில் உள்ளதால் மண் எடுக்க கூடாது என வலியுறுத்தி பொக்லின் எந்திரம் மற்றும் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து போராட்டத்தை பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story