வெட்டுக்காயங்களுடன் ஓடையில் வாலிபர் பிணம்


வெட்டுக்காயங்களுடன் ஓடையில் வாலிபர் பிணம்
x

ராஜபாளையம் அருகே வெட்டுக்காயங்களுடன் ஓடையில் வாலிபர் பிணத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,


ராஜபாளையம் அருகே வெட்டுக்காயங்களுடன் ஓடையில் வாலிபர் பிணத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடையில் வாலிபர் பிணம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடைப்பகுதியில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த பாஸ்டர் டேனியல் வெள்ளைத்துரையின் மகன் இமானுவேல் ராஜா (வயது 21) என்பது தெரியவந்தது.

வெட்டுக்காயம்

மேலும் இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கரிவலம்வந்தநல்லூர் அருகில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் அவரது தாத்தா முத்துச்சாமி என்பவர் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரது உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? யாரேனும் கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story