கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்


கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்
x

கிணற்றில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் ஒரு ஓட்டல் பின்புற பகுதியில், அதே பகுதியை சேர்ந்த பாலமணியம்மாளுக்கு என்பவருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று மாலை 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்டவர்கள் இதுகுறித்து பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் போல் இருப்பதால், அந்தப்பகுதியில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் வட மாநில ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story