கால்வாயில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்


கால்வாயில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்
x

ஆற்காட்டில் கால்வாயில் வாலிபர் கால்வாயில் பிணமாக கிடந்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலை பஜார் வீதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கால்வாயில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை.

குடிபோதையில் விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story