எஸ்.கல்லுப்பட்டி கிளை நூலகத்திற்கு புத்தகங்கள்


எஸ்.கல்லுப்பட்டி கிளை நூலகத்திற்கு புத்தகங்கள்
x

எஸ்.கல்லுப்பட்டி கிளை நூலகத்திற்கு புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.

விருதுநகர்

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. கலெக்டரின் வேண்டுகோளுக்கிணங்க காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், எஸ்.கல்லுப்பட்டி ஊராட்சி சார்பாகவும், மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பாகவும் புத்தக கண்காட்சியில் வாங்கப்பட்ட நூல்களை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி கல்லுப்பட்டியில் உள்ள அண்ணா நூலக பயன்பாட்டுக்காக எஸ்.கல்லுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணனிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி அலுவலர் வர்கீஸ், ஊராட்சி செயலாளர் பெரியசாமி, கல்லுப்பட்டி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாவட்டத்திலேயே முதல் முயற்சியாக ஊராட்சி மன்றம் மற்றும் மகளிர் சுயஉதவிகுழுக்கள் எடுத்த சீரிய முயற்சிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story