டிரைவருக்கு பாட்டில் குத்து; வாலிபர் கைது


டிரைவருக்கு பாட்டில் குத்து; வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2023 6:45 PM GMT (Updated: 4 Feb 2023 6:45 PM GMT)

டிரைவரை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா ஜமீன் அழகாபுரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் மாரிச்சாமி (வயது 20). அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் ராமசாமி (30), டிராக்டர் டிரைவர்.

நேற்று முன்தினம் நாலாட்டின்புத்தூர் அருகே ஜமீன் தேவர்குளத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு 2 பேர் சென்றனர்.

அப்போது, அங்கு வைத்து 2 பேருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரிச்சாமி அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து ராமசாமியை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின்பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர்ஜஸ்டின் வழக்குப்பதிந்து மாரிச்சாமியை கைது செய்தார்.


Next Story