மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் சிக்கினர்


மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் மெணசி, சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மெணசியில் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 60), சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் கமலா (வயது 55) ஆகியோர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி, அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story