செல்போன் கடையில் திருட்டு வழக்கில் சிறுவன் கைது


செல்போன் கடையில் திருட்டு வழக்கில் சிறுவன் கைது
x

செல்போன் கடையில் திருட்டு வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை டவுனில் பிருந்தாவனம் முக்கத்தில் அசாருதீன் என்பவரது செல்போன் கடையில் செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் திருட்டு மற்றும் 3 செல்போன் கடைகளில் கொள்ளை முயற்சி தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் அசாருதீன் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்தனர். இதில் ஈடுபட்டது திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த 18 வயது சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story